ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஆனந்தன் (27). இவர் தனது தோட்டத்தில் இரண்டு மாடுகள், பத்து நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், அவர் வழக்கம்போல மாடுகள், கோழிகளை தோட்டத்தில் அடைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
மீண்டும் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு இருந்த காவல் நாய் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தது. இதையடுத்த ஆறு நாட்டுக்கோழிகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.