தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்தியமங்கலத்தில் ஒற்றை யானை இடம் பெயர்ந்ததால் கிராம மக்கள் நிம்மதி - ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு: பவானிசாகர் அணை பகுதியில் உள்ள தார் சாலையில் ஜாலியாக உலா வந்த ஒற்றை யானை, விளா முண்டி வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்ததால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

ஒற்றை யானை இடம் பெயர்ந்ததால் கிராம மக்கள் நிம்மதி
ஒற்றை யானை இடம் பெயர்ந்ததால் கிராம மக்கள் நிம்மதி

By

Published : Nov 19, 2020, 12:38 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட பவானிசாகர் வனச்சரகத்தில் ஏராளாமான காட்டு யானைகள் உள்ளன.

பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், அவ்வப்போது அணைக்கு வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக பவானிசாகர் அணை பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை தார் சாலைகளில் ஜாலியாக உலா வந்தது.

தினமும் அணை முன்புறம் உள்ள பழந்தோட்ட நுழைவு வாயில் கேட்டை திறந்து புங்கார், பெரியார் நகர் உள்ளிட்ட கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்தது.

ஒற்றை யானை இடம் பெயர்ந்ததால் கிராம மக்கள் நிம்மதி

இதன் காரணமாக கிராம மக்கள் அச்சமடைந்தனர். தற்போது ஒற்றை யானை பவானிசாகர் அணை பகுதியில் இருந்து வெளியேறி விளாமுண்டி வனப்பகுதிக்கு சென்றுவிட்டது. யானை இடம் பெயர்ந்ததால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

ஒற்றை யானையை கண்காணிக்க வனத்துறை ஊழியர்கள் அடங்கிய நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சாலையை மறித்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய ஒற்றை யானை!

ABOUT THE AUTHOR

...view details