ஈரோடு மாவட்டம் பவானி சாலை அசோகபுரத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்குத் தேவையான நூல் அனுப்பி வைப்பது, உற்பத்தி செய்யப்பட்ட துணிக்கான கூலி வழங்குதல், கூட்டுறவு சங்கங்களில் உள்ள தனி அலுவலர்கள் உள்ளிட்ட கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குதல், இடமாறுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், விலையில்லா வேஷ்டி, சேலை உற்பத்தி செய்யும் கூட்டுறவு சங்கங்களுக்கும் இந்த அலுவலகத்தில்தான் கூலி வழங்கப்படுகிறது. இந்நிலையில், இங்கு பணியாற்றுபவர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடம் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.