சீனாவில் முதலில் மக்களை தாக்கிய கரோனா வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் கரோனா தாக்கம் வந்ததையடுத்து, தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் கரோனோ தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு காணொலியை வெளியிட்டு அசத்தியுள்ளனர்.