தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேன் மோதியதில் 7ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

கோபிசெட்டிபாளையம் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவர் மீது வேன் மோதியதில், மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

By

Published : Nov 14, 2022, 1:24 PM IST

Van
Van

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள காசிபாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி வேல்முருகனின் மகன் கவினேஷ், வைரவிழா மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று வழக்கம் போல பள்ளிக்குச் செல்வதற்காக காந்திநகர் பேருந்து நிறுத்தத்தில் கவினேஷ் நின்று கொண்டிருந்தார்.

அப்போது சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா வேனுக்கு குறுக்கே இருசக்கர வாகனம் ஒன்று வந்தது. இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக வேன் ஓட்டுநர் சதீஷ் பிரேக் போட்டதில், நிலைதடுமாறிய வேன், பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்த மாணவர் கவினேஷ் மீது மோதி, கவிழ்ந்தது. இதில் மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வேன் கவிழ்ந்ததில், அதில் பயணித்த 6 கல்லூரி மாணவர்கள் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பயணி என 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, கோபிசெட்டிப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு சென்ற கடத்தூர் காவல் துறையினர் கவினேஷின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: பிரியாணி சாப்பிட்ட மனைவி பலி; சோகத்தில் கணவர் தற்கொலை..

ABOUT THE AUTHOR

...view details