தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மலைப்பாதையில் வேரோடு சாய்ந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு!

ஈரோடு: சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதிகளில் பெய்த தொடர்மழையால் மண் சரிவு ஏற்பட்டு மரம் வேரோடு சாய்ந்ததால், மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

By

Published : Aug 9, 2019, 5:49 PM IST

மலைப்பாதை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்துவருகிறது. இதனால் கே.என்.பாளையம் வரையுள்ள மலைப்பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சாலையோர மரங்கள் வலுவிழந்து சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் நின்றன.

மலைப்பாதையில் வேரோடு சாய்ந்த மரம்

இந்நிலையில், கடம்பூர் 11-ஆவது மைல் எனப்படும் மலைப்பாதையில் இருந்த மரம் வேரோடு சாய்ந்தது. இந்த மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த முடியாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம் விழும்போது எந்த வாகனமும் அப்பகுதியில் பயணிக்காததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details