ஈரோடு: பெரியவலசு இரட்டை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர், மாணிக்கம் செல்வி (40). திருநங்கையான இவர் தனது குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், "நான் சொந்தமாக தறிப்பட்டறை, டிராவல்ஸ், நிதி நிறுவனம் மற்றும் சிறு, சிறு தொழில் செய்து வருகிறேன்.
திருநங்கைப் புகார்
ஈரோட்டைச் சேர்ந்த 4 பேர் கடந்த 3 மாதங்களாக, என்னை போனில் தொடர்பு கொண்டு ரூ. 25 லட்சம் தர வேண்டும். இல்லையென்றால் கடத்தி விடுவேன் என மிரட்டி வருகின்றனர்.