தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பரவல்: கிருமிநாசினி தெளிக்கும் பணியில் தீயணைப்பு படையினர்! - கிருமிநாசினியை தெளிக்கும் பணி

ஈரோடு: தீயணைப்புத்துறையினர் 40 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து தங்களது தீயணைப்பு வாகனத்தின் மூலம் கிருமிநாசினியை தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

TN Fireman service conduct disinfection at Erode
TN Fireman service conduct disinfection at Erode

By

Published : May 5, 2020, 12:53 AM IST

ஈரோடு மாவட்டத்தில், கரோனா வைரஸ் தொற்று தாக்கம் தீவிரமடைந்ததை அடுத்து, நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் ஈரோடு தீயணைப்புத்துறையினர் 40 நாட்களுக்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், ஏனைய மாநகராட்சிப் பகுதிகளில் தொடர்ந்து வீதி வீதியாக வீடு வீடாக தெருவாரியாக தீயை அணைக்கப் பயன்படுத்தும் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நேற்றும் ஈரோடு அறச்சலூர் சாலை, காசிப்பாளையம், மூலப்பாளையம் பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்புப் பணி நடைபெற்றது.

இதையும் படிங்க...சென்னையில் தீவிரம் காட்டும் கரோனா: ஐடி, தொழில் நிறுவனங்கள், கட்டுமானம், கடைகள் திறப்பது குறித்த நிபந்தனை என்ன?

ABOUT THE AUTHOR

...view details