தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் ஒரே நாளில் 3 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி! - ஈரோடு செய்திகள்

கோபிசெட்டிபாளையம் அருகே தடுப்பணையில் குளித்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2 பேரும், குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற 4ஆம் வகுப்பு மாணவி என ஒரே நாளில் மூன்று பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Three school students drowned in Erode
ஈரோட்டில் ஒரே நாளில் மூன்று பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்

By

Published : Apr 9, 2023, 12:42 PM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியைச் சேர்ந்த காட்சன் பிரிஞ்ச் (15), அதே பகுதியைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (15) இருவரும் கவுந்தப்பாடி அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று விடுமுறை என்பதால் காட்சன் பிரிஞ்ச், ஹரி கிருஷ்ணன் மற்றும் இவர்களது நண்பர்கள் நான்கு பேருடன் ஆயிக்கவுண்டனூரில் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக காட்சன் பிரிஞ்ச், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் தடுப்பணையில் மூழ்கினர்.

அதைத்தொடர்ந்து மற்ற மாணவர்கள் சத்தமிடவே அருகிலிருந்தவர்கள் வந்து தண்ணீரில் மூழ்கிய இருவரையும் மீட்டபோது இருவருமே உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்த கவுந்தப்பாடி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பினர். மேலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல, கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் பழைய சூரி பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் (35) சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவியும், யாழனி (9) என்ற மகளும், தேவபிரசாந்த் (7) என்ற மகனும் உள்ளனர். யாழினி புது சூரிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பும், தேவபிரசாந்த் அதே பள்ளியில் 2ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை கதிர்வேல், மகள் யாழினி, மகன் தேவபிரசாந்த்துடன் அவர்கள் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செங்காளிபாளையம் குளத்தில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். மூன்று பேரும் 10 அடி ஆழமுள்ள குளத்தில் மீன் பிடித்து விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக யாழினி தண்ணீரில் மூழ்கினார். அதைத்தொடர்ந்து கதர்வேல் குளத்தில் மூழ்கிய மகளை தேடி உள்ளார். மகளை மீட்க முடியாத நிலையில் அவரது தம்பி அய்யாசாமி மற்றும் அருண்குமாருக்குத் தகவல் தெரிவித்து உள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த அய்யாசாமி மற்றும் அருண்குமார் ஆகியோர் குளத்தில் இறங்கி தேடியபோது யாழினியை சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கடத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று குளத்தில் மீட்கப்பட்ட யாழினியின் சடலத்தை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோபிசெட்டிபாளையத்தில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி கோடை விடுமுறை காலம் என்பதால் பெற்றோர் கவனமாக பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கும் எல்.முருகன்.. பாஜக நிர்வாகி வெளியிட்ட தகவல்!

ABOUT THE AUTHOR

...view details