சத்தியமங்கலம், காந்தி நகர் பகுதியில் முருகேசன் என்பவர், கார் பழுது நீக்கும் பட்டறை நடத்தி வருகிறார். இன்று காலை முருகேசன் தனது பட்டறையைத் திறக்கச்சென்றபோது, உள்ளே 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நின்று கொண்டு, அங்கிருந்த காரின் கதவைத் திறக்க முயன்றுள்ளார்.
இதைக்கண்ட முருகேசன் அதிர்ச்சியடைந்து, அருகிலிருந்தவர்களை சத்தம்போட்டு அழைத்துள்ளார். சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள், அந்தநபரை கையும் களவுமாக பிடித்து, தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து சத்தியமங்கலம் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து வந்த காவல் துறையினர் அந்நபரைப் பிடித்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்நபர் கொண்டப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பதும், பவானிசாகர் அருகேவுள்ள அரசு மதுபானக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.