ஈரோடு: சரஸ்வதி, ஆயுத பூஜையை முன்னிட்டு சத்தியமங்கலம் பகுதியில் வாழைகள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. சத்தியமங்கலம் வாழைத்தார் மண்டியில் சுமார் ரூ.2 ஆயிரம் வாழைத்தார்கள் விற்பனைக்குக் கொண்டு வந்தனர். சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைக்காக வாழைப்பழங்களின் தேவை அதிகரித்துள்ளது.
இதனால் பூவன் தார் ஒன்று ரூ.500 முதல் ரூ.700க்கும், தேன் வாழைத்தார் ரூ.600க்கும், செவ்வாழைத்தார் ரூ.350ல் இருந்து ரூ.500ஆகவும், நேந்திரம் தார் ரூ.40ஆகவும் விற்பனையானது. கிராமங்களில் கடை வைத்திருப்போர் வாழைத்தார்களை மொத்தமாகவும் பொதுமக்கள் சீப்பாகவும் வாங்கிச்சென்றனர்.