ஈரோடுமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி மாணவ மாணவிகளின் ஓட்டத்தை அவர் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர், 'இந்தியாவில் எப்போதும் நடைபெறாத அளவு 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
சுமார் 188 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2000 விளையாட்டு வீரர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இது ஒட்டுமொத்த விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க எடுக்கும் நடவடிக்கை ஆகும். ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் சுமார் 40 ஏக்கரில் மிக பிரமாண்டமாக உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. எனவே, ஈரோடு வஉசி மைதானத்தில் சிந்தடிக் ஓடு தளம் அமைக்கும் திட்டம் அங்கு மாற்றப்படுகிறது.
உள்விளையாட்டு அரங்கில் பல்வேறு விளையாட்டுகளுக்கான அடிப்படை கட்டுமான வசதிகள் ஏற்படுத்தப்படும். நேற்று அதிமுக தமிழ்நாடு அளவில் போராட்டம் நடத்தியது. அவர்களிடம் பாராட்டு எதிர்பார்க்க முடியாது. மின் கட்டண உயர்வு மக்களைப்பெரிதும் பாதிக்காது என்று ஏற்கனவே மின்துறை அமைச்சர் விளக்கியுள்ளார். தமிழ்நாட்டின் நிதிநிலை எந்த அளவு உள்ளது என்று மக்களுக்கே தெரியும். அதனால் தான் வீட்டு வரிகூட உயர்த்தப்பட்டது.