ஈரோடு:அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி வனசரகத்திற்குட்பட்ட குரும்பனூர் காடு வனப்பகுதியில் உள்ள நீரோடையில் தண்ணீர் குடிக்க வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று அங்குள்ள சேற்றில் வழுக்கி விழுந்து உயிரிழந்தது.
தொடர்ந்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் பெண் யானை இறந்து கிடப்பதை பார்த்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.