தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிறந்து 2 நாள்களேயான குழந்தை இறப்பு: அரசு மருத்துவமனை கண்ணாடி உடைப்பு - பிறந்து 2 நாள்களான குழந்தை இறப்பு

பிறந்து இரண்டு நாள்களேயான குழந்தை இறப்பில் சந்தேகம் உள்ளது எனக் கூறி பெற்றோர், உறவினர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையின் கண்ணாடி உள்ளிட்ட பொருள்களைச் சேதப்படுத்தினர்.

மருத்துவமனை கண்ணாடி உடைப்பு
மருத்துவமனை கண்ணாடி உடைப்பு

By

Published : Dec 22, 2021, 9:00 AM IST

ஈரோடு: நசியனூர் ஆட்டையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனூர் சம்பத், மங்கையர்கரசி தம்பதி. மங்கையர்கரசி நிறைமாத கர்ப்பிணியாக ஈரோடு அரசு மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

குழந்தை பிறந்து இரண்டு நாள்களாகி இருந்த நிலையில், மங்கையர்கரசியிடம் இன்று காலையில் குழந்தையைப் பரிசோதிக்க வேண்டும் எனக் கூறி செவிலியர் வாங்கிச் சென்றுள்ளனர். பின்னர் மங்கையர்கரசியை கருத்தடை செய்ய வேண்டும் எனச் செவிலியர் அழைத்துள்ளனர்.

மருத்துவமனை கண்ணாடி உடைப்பு

குழந்தையை வாங்கிச் சென்று இரண்டு மணி நேரம் கழித்து அது இறந்துவிட்டதாகப் பெற்றோரிடம் செவிலியர் தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த அடைந்த பெற்றோர், உறவினர்கள், குழந்தை இறப்பில் சந்தேகம் உள்ளது எனக் கூறி மருத்துவமனையின் கண்ணாடி உள்ளிட்ட பொருள்களைச் சேதப்படுத்தினர்.

இதையும் படிங்க:கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்

ABOUT THE AUTHOR

...view details