மாதம்தோரும் வரும் அமாவாசை தினம் இந்துக்களின் முக்கிய நிகழ்ச்சியாக திகழ்ந்து வருகிறது. இதில் தை மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. மற்ற மாதங்களில் விரதம் இருந்து திதி கொடுக்க இயலாத பக்தர்கள் அனைவரும் தை மாதத்தில் வரும் அமாவாசையில் விரதமிருந்து முதாதையர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர்.
மேலும் தை அமாவாசையில் விரதமிருந்து மூதாதையர்களுக்கு தர்பணம் செய்தால் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால், தை அமாவாசையான இன்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்கள் விரதமிருந்து முதாதையர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர்.
ஈரோடு: பவானி கூடுதுறை தென்னகத்தின் காசி என அழைக்கப்படுகிறது. ராமேஸ்வரத்திற்கு அடுத்தப்படியாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க புகழ்பெற்ற இடமாக இது திகழ்கிறது. தை அமாவாசையான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து புனித நீராடி, தங்களின் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பிண்டங்களை ஆற்றில் கரைத்து வழிபாடு நடத்தினர்.
மேலும் காய்கறிகளை வைத்து முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபாடும் நடத்தினர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.