தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாளவாடி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சீதனம் வழங்கிய இஸ்லாமியர்கள் - சீதனம் வழங்கிய முஸ்லீம்கள்

ஈரோடு: தாளவாடி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு இஸ்லாமியர்கள் பாரம்பரிய முறைப்படி சீதனம் வழங்கியது அங்கிருந்த பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Talwadi Mariamman Temple
Talwadi Mariamman Temple

By

Published : Mar 1, 2020, 9:49 PM IST

தமிழ்நாடு, கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள தாளவாடியில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலையொட்டி இஸ்லாமியர்கள் வழிபடும் பெரிய பள்ளிவாசல் உள்ளது. பள்ளி வாசல் முன் குண்டம் வார்க்கப்பட்டு தீ மிதி நிகழ்வு நடைபெறுவது வழக்கம். பழமையான இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக ராஜகோபுரம், விமான கோபுரத்தின் திருப்பணிகள் நடைபெற்றன.

திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் வேத விற்பன்னர்கள் யாக குண்டம் அமைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

இன்று மதியம் யாக சாலையிலிருந்து புனித நீர் எடுத்து கோயில் கோபுரத்தில் உள்ள விமான கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து புனித நீர் ஊற்றினர். அதனைத் தொடர்ந்து ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. பாரம்பரியமாக மாரியம்மன் கோயில் விழாவில் இஸ்லாமியர்கள் சீதானம் வழங்குவது வழக்கமாக இருந்த நிலையில் நீண்ட நாள்களாக நடைமுறையில் இல்லாமல் இருந்தது.

சீதனம் வழங்கிய முஸ்லீம்கள்

இந்நிலையில், இன்று நடந்த கும்பாபிஷேக விழாவில் இஸ்லாமியர்கள் 30 பேர் சீதனமாக அம்மனுக்கு சேலை, தேங்காய், பழம், இனிப்பு ஆகியவற்றை வழங்கி மகிழ்ச்சியைப் பரிமாற்றிக்கொண்டனர். அதேபோல, கோயில் நிர்வாகம் வழங்கப்பட்ட பிரசாத்தையும் வாங்கி சாப்பிட்டனர். பாரம்பரியமான நடந்த சம்பிரதாயம் முறையை தற்போது பின்பற்றுவதாக இஸ்லாமியர்கள் தெரிவித்தது அங்கிருந்த கோயில் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 16 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சீல்!

ABOUT THE AUTHOR

...view details