தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஞாயிறு பொதுமுடக்கம்: கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை! - ஞாயிறு பொதுமுடக்கம்

ஈரோடு: சத்தியமங்கலத்தில் மதுபாட்டில்களைக் கூடுதல் விலைக்கு விற்பதாகப் புகார் அளிக்கப்பட்டது.

tasmac
tasmac

By

Published : Apr 25, 2021, 9:16 AM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று நோய் வேகமாகப் பரவிவருகிறது. கரோனா பரவலைத் தடுக்கும்விதமாக தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் காரணமாக நேற்று (ஏப்ரல் 24) மதுப்பிரியர்கள் மதுபானம் வாங்க டாஸ்மாக்கிற்குப் படையெடுத்தனர்.

மதுப்பிரியர்கள் முகக்கவசம் இன்றியும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமலும் மதுபானங்களை வாங்கிச்சென்றனர். இந்நிலையில், நேற்றிரவு 8 மணிக்கு மேல் விற்கப்பட்ட மதுபாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கப்பட்டது.

இதற்கு மதுபான பிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் கண்டு கொள்ளவில்லை.

ABOUT THE AUTHOR

...view details