தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவி தூக்கிட்டு தற்கொலை - மொபைலில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் நேர்ந்த சோகம்

கோபிசெட்டிபாளையம் அருகே குருமந்தூரில் செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்தால் மனமுடைந்த பள்ளி மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

the solution for anything
Suicide is not

By

Published : Oct 23, 2021, 8:29 PM IST

ஈரோடு:நம்பியூர் வட்டம், குருமந்தூர் மேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி குழந்தைவேல். இவரின் மனைவி கவிதா; இவருக்கு சந்தோஷ் என்ற மகனும், தக்சன்யா என்ற மகளும் உள்ளனர். தக்சன்யா கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். இவர் கரோனோத் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்ததுள்ளார்.

பள்ளிகள் திறந்த நிலையில் தக்சன்யா, கரோனோ காலத்தில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக வாங்கிய செல்போனில் கேம் விளையாடியே வந்துள்ளார். இதனால் தக்சன்யாவை பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. மனம் உடைந்த தக்சன்யா தனது அறைக்கு சென்று தனியாக இருந்துள்ளார்.

தற்கொலை

பள்ளிக்கு செல்லும் வாகனம் வந்து வெகுநேரமாகியும், தக்சன்யா வராததால் சந்தேகமடைந்த தாய் வீட்டுக்குள்சென்று பார்த்த பொழுது, தக்சன்யா மின்விசிறியில் தூக்கில் தொங்கிள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தக்சன்யாவை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தந்தை நம்பியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தேசிய மருந்தியல் கழகம் அமைக்கும் பணியை தீவிரப்படுத்துக - சு. வெங்கடேசன் எம்பி

ABOUT THE AUTHOR

...view details