ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் டிசம்பர் 17ஆம் தேதி வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கிடையில், யானை தாக்கி வனஊழியர், சமூக ஆர்வலர் என இருவர் உயிரிழந்ததையடுத்து, இந்தப் பணி பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது மீண்டும் வனவிலங்கு கணக்கெடுப்பு பணியை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர். சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி, டி.என்.பாளையம், கடம்பூர், கேர்மாளம், ஆசனூர், தலமலை, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணியை வன ஊழியர்கள் ஐந்து பேர் மட்டும் மேற்கொள்கின்றனர்.