தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 11, 2019, 10:25 PM IST

ETV Bharat / state

ஈரோட்டில் மழை வேண்டி சிறப்பு யாகம்!

ஈரோடு: பிரசித்தி பெற்ற கோயிலான ஸ்ரீ வாருணாம்பிகா சமேத ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

ஈரோட்டில் மழை வேண்டி சிறப்பு யாகம்!

தமிழ்நாடு முழுவதும் அக்னி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பல்வேறு வழிகளில் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள பல்வேறு வழிகளை பின்பற்றி வரும் நிலையில் மழை வேண்டி சிறப்பு யாகம் தமிழ்நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

இதேபோல், ஈரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலான ஸ்ரீ வாருணாம்பிகா சமேத ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோயிலில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் சிறப்பு வருண யாகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் மழை வேண்டி சிறப்பு யாகம்

ABOUT THE AUTHOR

...view details