தமிழ்நாடு

tamil nadu

தேசிய நெடுஞ்சாலையைக் கடந்துசென்ற ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் அச்சம்!

By

Published : Apr 15, 2021, 11:46 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் - மைசூரு நெடுஞ்சாலையை ஒற்றை காட்டு யானை கடந்துசென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற ஒற்றை யானை
தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற ஒற்றை யானை

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, குடிநீர் தேடி வனப்பகுதியிலிருந்து வெளியேறி சாலையோரம் சுற்றித் திரிவதோடு அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்திவருகின்றன.

இந்நிலையில் இன்று காலை சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே சாலையோரம் ஒற்றை ஆண் யானை சுற்றித்திரிந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் சாலையில் யானை நடமாடுவதைக்கண்டு தனது காரை நிறுத்தியதைத் தொடர்ந்து யானை சாலையோரம் மெதுவாக நடந்துவந்தது.

யானை வருவதைக் கண்ட வாகன ஓட்டி தனது காரை பின்னோக்கி இயக்கினார். சிறிது தூரம் வந்த யானை தேசிய நெடுஞ்சாலையை மெதுவாகக் கடந்து சாலையின் மறு பகுதிக்குச் சென்றது.

ஒற்றை யானை சாலையோரம் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். பகல் நேரங்களில் காட்டு யானைகள் சாலையைக் கடந்துசெல்வதால் வாகன ஓட்டிகள் மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்குமாறு வனத் துறையினர் அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க:2 லட்சத்தைத் தாண்டிய ஒருநாள் கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details