ஈரோடு:பெருந்துறை அருகே உள்ள பாலக்கரையில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 35 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தினமும் இரு மாணவர்கள் வீதம் பிளீச்சிங் பவுடர் கொண்டு கழிவறைகளை தலைமை ஆசிரியை கீதா தூய்மைப்படுத்த வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தொடர்ந்து பெற்றோர்கள் புகார் அளித்து வந்தனர்.
பெற்றோர் பள்ளிக்கு சென்று ஆசிரியையிடம் முறையிட்டும் தொடர்ந்து இதே செயலில் ஈடுபடுத்தியதால், குழந்தைகள் நல அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.