தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்தியமங்கலம் மாட்டுத் தீவன சோளத்தட்டு அறுவடை தீவிரம்! - கடம்பூர் மலைப்பகுதியில் அறுவடை பணி தீவிரம்

ஈரோடு: கேரள யானைகளுக்கு தீவனமாக வழங்கப்படும் மக்காசோளத் தட்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் மலைப்பகுதியில் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது.

erode
erode

By

Published : Dec 10, 2020, 1:37 PM IST

கேரளாவில் யானைகளுக்கு தீவனமாக அனுப்பப்படும் மக்காச் சோளத் தட்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் மலைப்பகுதி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்காச் சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.

மழைநீரை எதிர்பார்த்து சாகுபடி செய்யப்படும் சோளப்பயிர் மூன்று மாதத்தில் அறுவடை செய்யப்படும். மழைநீரால் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் சென்னை உள்பட கேரளா மாட்டுத் தீவன தட்டுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் பகுதியில் சாகுபடி செய்த மக்காச்சோளத் தட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சத்தியமங்கலம் பகுதியில் ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் விலை பேசப்பட்டு மக்காச்சோளத் தட்டுகள் அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது.

இதற்காக பயிற்சி பெற்ற தட்டு அறுக்கும் பணியாளர்கள் தட்டுகளை அறுத்து தோட்டங்களில் இருந்து சுமந்து லாரியில் ஏற்றுகின்றனர்.

லாரியில் நிரப்பப்படும் தட்டு கோயம்புத்தூர், கேரளா, கடலூர் மாவட்டம் வழியாக சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

சத்தியமங்கலம் மாட்டு தீவன சோளத்தட்டு அறுவடை தீவிரம்

இதன் மூலம் அங்கு வளரும் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படாமல் கிடைக்கிறது. தற்போது கேரளாவில் மழை பெய்து வருவதால் அங்குள்ள யானைகளுக்கு மக்காச் சோளத் தட்டு தான் முக்கிய தீவனமாக உள்ளது.

சத்தியமங்கலத்தில் இருந்து கேரளா கோயிலில் உள்ள யானைகளுக்கு தட்டு அனுப்பப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:வேளாண் சட்டம்; மோடி உருவபொம்மையை எரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

ABOUT THE AUTHOR

...view details