ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் ஏராளமான காகித நூற்பாலைகள் உள்ளன. இதனால், அப்பகுதியில் கட்டுமானப் பணிகளில் அதிகமான வெளி மாநிலத் தொழிலாளர்கள் தங்கி, பணிபுரிந்து வருகின்றனர். கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் தொடங்கிய ஊரடங்கு உத்தரவு, மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். பல்வேறு இடங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்து போராடி வருகின்றனர். இந்நிலையில், வெளிமாநிலத் தொழிலாளர்கள், தங்களது சொந்த மாநிலம் செல்ல விருப்பம் தெரிவிக்கும் நபர்கள் குறித்த பட்டியலை சத்தியமங்கலம் நகராட்சி தயாரித்து வருகிறது.