ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் பவானிசாகர் தாளவாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் வாக்குகள் பெரும்பாலும் திமுகவுக்கு சாதகமாக அமைந்தது.
15 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களில் பெரும்பாலான வார்டுகளில், அதிமுக வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கும், அதிமுக முன்னிலை பெற்றது. சத்தியமங்கலம் யூனியன் பொறுத்தவரை முதல் வெற்றியாக ஊராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுகவை சேர்ந்த சரோஜா என்பவர் வெற்றிபெற்றுள்ளார்.