தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதிக்கப்பட்ட சாலையை சரிசெய்த மாணவர்கள்! - சத்தியமங்கலம்

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் குண்டும் குழியுமாக மாறிய வனசாலையை பள்ளி மாணவர்கள் சீரமைத்து பேருந்து இயக்க உதவியுள்ளனர்.

sathy student help bus issue

By

Published : Oct 18, 2019, 1:01 PM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாக்கம்பாளையம், அருகியம், கடம்பூர் மலைப்பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்து இயக்குவது கடந்த நான்கு நாட்களாக நிறுத்தப்பட்டது. தற்போது கடம்பூர் முதல் அருகியம் வரை மட்டுமே அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது.

இந்நிலையில், அருகியத்தைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடன் புறப்பட்ட அரசுப் பேருந்து மாமரத்துத்தொட்டி என்ற இடத்தில் இருந்த குழியில் சிக்கி நின்றதால் பேருந்து தொடர்நது இயக்கமுடியாமல் ஓட்டுநர் சிரமத்துக்குள்ளானார்.

சாலையை சரிசெய்த மாணவர்கள்

அதனைத் தொடர்ந்து பயணிகள், பள்ளி மாணவர்கள் குழியில் கற்களைப் போட்டு பேருந்தை இயக்க உதவினர். தொடர்ந்து மேலும் பல்வேறு இடங்களில் குண்டும் குழியாக உள்ள இடங்களில் பள்ளி மாணவர்கள் கற்கள் நிரம்பி பேருந்து இயக்குவதற்கு ஏதுவாகச் சாலையை சீரமைத்து உதவினர். பேருந்து இயக்குவதற்கு உதவி செய்துவரும் மாணவர்களைப் பொதுமக்கள் பாராட்டினர்.

இதையும் படிங்க:

டெங்கு காய்ச்சலுக்கு பலியான ஏழு வயது சிறுவன்!

ABOUT THE AUTHOR

...view details