தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 18, 2021, 7:18 AM IST

ETV Bharat / state

பழ வியாபாரியிடமிருந்து பணம் பறிமுதல் செய்த பறக்கும் படையினர்

ஈரோடு: பழ வியாபாரி ஒருவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற 35 லட்ச ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

லட்சம் பறிமுதல்
லட்சம் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் அரசியல் கட்சியினரால் பொதுமக்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி இன்று (மார்ச்.17) வீரப்பம்பாளையம் பிரிவு அருகே நிலை கண்காணிப்புக் குழு அலுவலர் பிரபு தலைமையில் ஊழியர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில், 35 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் அந்தக் காரில் இருந்தது தெரிய வந்தது.

ஆனால் பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லை. காரை ஓட்டி வந்தவர் நசீர் என்பதும் அவர் பழ வியாபாரி என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து நிலை கண்காணிப்புக் குழுவினர் அந்தப் பணத்தை கைப்பற்றி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பணத்திற்குரிய ஆவணங்களைக் காட்டி பணத்தை பெற்றுச் செல்லலாம் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details