தமிழ்நாடு

tamil nadu

2.16 லட்சம் ரூபாய் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

கோபி அருகே உரிய ஆவணங்களின்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

By

Published : Mar 15, 2021, 7:40 AM IST

Published : Mar 15, 2021, 7:40 AM IST

கோபி அருகே உரிய ஆவணங்களின்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
கோபி அருகே உரிய ஆவணங்களின்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பெரியகொரவம்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற சண்முகசுந்தரம் என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

இச்சோதனையில் உரிய ஆவணங்களின்றி இரண்டு லட்சத்து 16 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தை அவர் கொண்டு வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, உடனடியாக பணத்தைக் கைப்பற்றிய பறக்கும் படையினர், அவரிடத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சண்முகசுந்தரம் பிரபல மசால் நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வருவது தெரிய வந்தது.

மேலும் விற்பனை செய்யப்பட்ட மசாலா பொருள்களுக்கான தொகையையே தான் வசூலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் அவரிடத்தில் இல்லை. ஆகையால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கோபிச்செட்டிப்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிதேவியிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க :ஜெயலலிதாவின் மரணத்துக்கு கருணாநிதியும், முக ஸ்டாலினும்தான் காரணம்- எடப்பாடி பழனிசாமி!

ABOUT THE AUTHOR

...view details