ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகர் வனப்பகுதியில் பழங்குடியினர் கலாசார அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பவானிசாகர் வனச்சரகத்தில், காராச்சிக்கொரை பகுதியில் 20 ஹெக்டேர் பரப்பளவில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ரூ.7 கோடி செலவில் கட்டுமானப்பணி தொடங்கியது.
இந்த அருங்காட்சியகத்தில் பழங்குடியின மக்கள் வனம், வன உயிரினங்களுடன் ஒன்றிணைந்து வாழும் முறை, வாழ்விடங்கள், வாழ்க்கை முறைகள், பாரம்பரிய முறைகள், பழங்குயின் மக்கள் பயன்படுத்தியப் பொருட்கள், விவசாய முறைகள், அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள், பயன்பாட்டு இசைக் கருவிகள் உள்ளிட்டவை பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.