ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக்கோட்டத்தில் வனத்தையொட்டி அரேப்பாளையம் கிராமம் உள்ளது. இப்பகுதி மக்கள் காவல்தெய்வமாக பிசில் மாரியம்மன் கோயில் சுயம்பு கற்சிலையை வழிபட்டு வந்தனர்.
கட்டடமின்றி திறந்தவெளியில் இக்கோயில் உள்ள பகுதியில் யானை நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் திறந்தவெளியில் இருப்பதால் வனவிலங்குகள் தாக்குதலை தவிர்க்க கோயிலை மக்கள் வசிக்கும் பகுதிக்கு கொண்டுச் செல்வதற்கான ஏற்பாடுகளை வனத் துறையினர் செய்தனர். இதில் பூசாரிகள் மட்டும் ஏற்றுக்கொண்ட நிலையில் வனத் துறையினர் நேற்று (அக். 14) கற்சிலையைப் பிடுங்கினர்.
தகவலறிந்து வந்த ஊர்மக்கள் மக்களிடம் கருத்து கேட்டகாமல் சிலையை அகற்றக்கூடாது என வாதிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.