ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் வாரந்தோறும் வியாழக்கிழமை கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.
சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம், அந்தியூர், புஞ்சைபுளியம்பட்டி, அன்னூர், அவிநாசி, மேட்டுப்பாளையம், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் வந்து கால்நடைகளை விலைபேசி வாங்கிச் செல்வர்.