நாட்டில் கரோனாவைக் கட்டுப்படுத்த கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் முதற்கட்டமாகப் பயன்பாட்டுக்கு வந்தன. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்திலும் முதலில் முன்களப் பணியாளர்ளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மார்ச் 1ஆம் தேதிமுதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயது முதல் 59 வயதுக்குள்பட்ட இதயநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈரோட்டில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் என 24 மையங்களிலும், 42 தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.
தற்போது கரோனா தாக்கம் அதிகரித்துவருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.