நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தெங்குமரஹாடா கிராமத்துக்கு குறுக்கே மாயாறு ஓடுகிறது. மாயாற்றை தாண்டி தான் மக்கள் கிராமத்துக்குள் செல்ல முடியும். மாயாற்றை மக்கள் பரிசலில் கடந்து செல்கின்றனர். மாயாற்றில் வெள்ளப்பெருக்கின் போது மக்கள் ஆபத்தான முறையில் பரிசலில் கடப்பது குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து அக்கிராமத்துக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். அங்கு மக்களின் அவலநிலையை கண்டு புதியதாக விசைப்படகு வாங்கித்தருவாக உறுதியளித்தார். இதையடுத்து செவ்வாய்க்கிழமை செங்கோட்டையன் தனது சொந்த செலவில் ரூ.6 லட்சம் மதிப்பிலான விசைப்படகை கிராமமக்கள் முன்னிலையில் தெங்குமரஹாடா ஊராட்சித் தலைவர் சுகுணா மனோகரனிடம் ஒப்படைத்தார்.