நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக, சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் செயல்பட்டு வந்த வாரச்சந்தை தற்போது புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால் இட நெருக்கடியை தவிர்த்து விசாலமான இடத்தில் காய்கறிகடைகள் சமூக இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மக்கள் 1 மீட்டர் தூரத்தில் நின்று ஒருவருக்கொருவர் வரிசையாக பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் திரியும் நபர்களை காவல் துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.