சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் உட்கோட்டத்தில் சிறுத்தை, புலிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடர்ந்த காட்டுப்பகுதியில் திரிந்த சிறுத்தைகள் தற்போது மக்கள் நடமாடும் பகுதியில் திரிவதை வாகன ஓட்டிகள் பார்த்துள்ளனர்.
இந்நிலையில் ஆசனூர் அடுத்துள்ள காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே சாலையோர மரத்தில் ஒரு சிறுத்தை ஹாயாக அமர்ந்திருந்தது. இதைக் கண்ட வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் சிறுத்தை மரத்தில் அமர்ந்திருந்த காட்சியை படம் பிடித்தார். சிறிது நேரம் அமர்ந்திருந்த சிறுத்தை வாகனத்தை கண்டவுடன் கீழே குதித்து வனப்பகுதிக்குள் ஓடிச் சென்று மறைந்தது.