தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 1, 2023, 7:45 PM IST

ETV Bharat / state

கடத்தல் வழக்கில் யுவராஜ் மற்றும் அமுதரசு ஆகியோருக்கு விடுதலை

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரின் மகள் பிரேமலதா மற்றும் அவரது கணவர் பாலாஜி ஆகியோரை கடத்திப் பணம் கேட்டு மிரட்டியதாக யுவராஜ் மற்றும் அமுதரசு ஆகியோரின் மீது எழுந்த புகாரின் பேரில் வழக்குப் பதியப்பட்ட நிலையில் நடந்த விசாரணையின் முடிவில் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

judgement
கடத்தல் வழக்கில் யுவராஜ் மற்றும் அமுதரசு ஆகியோர்க்கு விடுதலை

கடத்தல் வழக்கில் யுவராஜ் மற்றும் அமுதரசு ஆகியோருக்கு விடுதலை

ஈரோடு: வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரின் மகள் பிரேமலதா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு சென்னிமலை முகாசி பிடாரியூரை சேர்ந்த பாலாஜி என்பவரை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் வீட்டை விட்டு இருவரும் வெளியேறினர்.

மேலும், இருவரும் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியிலுள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த இரண்டு நபர்களை கடத்தி வைத்துக்கொண்டு பெற்றோரிடம் பணம்கேட்டு யுவராஜ், அமுதரசு, சரவணன் ஆகியோர் மிரட்டினர். இந்நிலையில் இளம் தம்பதியர் இவர்களிடம் இருந்து தப்பித்து பெருந்துறை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். மேலும்,பெண்ணின் தாயார் மஞ்சுளா அளித்தப் புகாரின் பெயரில் இளம் பெண்ணை கடத்தியதாக யுவராஜ், சரவணன், அமுதரசு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், கடந்த 2015ஆம் ஆண்டு சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் வேறு சமூகத்தைச் சார்ந்த பெண்ணை காதலித்ததாகக் கூறி கொலை செய்யப்பட்ட வழக்கில் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனத் தலைவர் யுவராஜ் உள்பட 17 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.

நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் இருந்த வழக்கை 2019ஆம் ஆண்டு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம் யுவராஜ் மற்றும் அவரது கார் ஓட்டுநருக்குத் தலா மூன்று ஆயுள் தண்டனையும் அவரது கூட்டாளிகள் 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி, கடந்த 2022ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் 5 பேர் விடுவிக்கப்பட்டனர். இருவர் இறந்து போனதால் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.

கோகுல் ராஜ் தாம் காதலித்ததாக கூறப்படும் பெண்ணுடன் திருச்செங்காடு கோயிலுக்கு சென்றது. அங்கிருந்து மாயமானது. தலை துண்டிக்கப்பட்ட நிலையில் யுவராஜ் உடல் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது போன்ற சம்பவங்களை காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்ததாகவும்; சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை எனக் கூறி யுவராஜ் உள்ளிட்ட எட்டு பேரின் ஆயுள் தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர்.

இதனைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையில் தண்டனை பெற்று வரும் யுவராஜ் மற்றும் சேலம் மத்திய சிறையில் தண்டனை பெற்று வரும் அமுதரசு ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் நீதிபதி விபிசி முன்பு ஆஜர்படுத்தபட்டனர். சேலம் - மஞ்சுளா அளித்தப்புகாரின்பேரில் வழக்கை விசாரித்த நீதிபதி விபிசி பல வருடங்களாக நடந்து வந்த வழக்கில் விசாரணையின் முடிவில் இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து மீண்டும் பலத்த பாதுகாப்புடன் சிறைக்குச் செல்லும் வழியில் செய்தியாளர்களைச் சந்தித்த யுவராஜ் சூழ்நிலையின் காரணமாக போடப்பட்ட வழக்கு நீதி வழங்கபட்டு உள்ளதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் பலத்த பாதுகாப்புடன் இருவரையும் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:இந்திய கிரிக்கெட் தேர்வு குழு உறுப்பினர்களுக்கு இவ்வளவு சம்பளமா? இதில் சம்பள உயர்வு வேறையா?

ABOUT THE AUTHOR

...view details