கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன், நகர் பகுதி முழுவதும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் ஒலிபெருக்கில் கரோனா நோய் தொற்று மாவட்டத்தில் அதிகமாக உள்ளதால் மக்கள் விட்டைவிட்டு வெளியே வரக் கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.