தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 6, 2019, 8:19 AM IST

ETV Bharat / state

மைசூர் சாலையில் சுற்றித்திரியும் காட்டு யானை - பொதுமக்கள் அச்சம்

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பகலில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

wild elephant, மைசூர் சாலையில் சுற்றித்திரியும் காட்டு யானை
wild elephant

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழ்நாடு - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது காட்டு யானைகள் கடந்து செல்வது வழக்கம்.

இதனிடையே பண்ணாரி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் நடமாடுகிறது. இந்த யானை அவ்வப்போது சாலையின் நடுவே நின்றுகொண்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்து வருவதால் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

மைசூர் சாலையில் சுற்றித்திரியும் காட்டு யானை

இதேபோல், நேற்று காலை 11 மணியளவில் பண்ணாரி அம்மன் கோயில் அடுத்துள்ள வனப்பகுதியில் திம்பம் மலை அடிவாரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் அருகே ஒற்றை யானை சாலையின் நடுவே நின்றுகொண்டு இருந்ததால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் யானையை அங்கிருந்து விரட்ட முயற்சித்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து யானை வனப்பகுதிக்குள் சென்றதையடுத்து வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details