நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் பவானிசாகர் அணைக்கு, அதிகபட்சமாக 22 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து வந்தது. இந்நிலையில் 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை நள்ளிரவில் எட்டியது.
பொதுப்பணித்துறை விதிகளின்படி அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டும் போது, நீரைத் தேக்கி வைக்க இயலாது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் உபரி நீரை அப்படியே பவானிஆற்றில் திறந்துவிட வேண்டும்.
அதன்படி தற்போது அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளதால் அணையின் மேல் பகுதியில் உள்ள ஒன்பது மதகுகளின் வழியாக, ஐந்து கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து எட்டு ஆயிரம் கன அடி வரை நீர் திறந்து விடப்பட்டது.