ஈரோடு:தாளவாடி மலைப்பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் சத்தியமங்கலம், கோவை, ஈரோடு, திருப்பூர், மற்றும் கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர், மைசூர் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல தாளவாடி பேருந்து நிலையம் வந்து தான் செல்ல வேண்டும்.
இதனால் தாளவாடி பேருந்து நிலையம் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில், கடந்த சில நாள்களாக குடிமகன்கள் குடித்துவிட்டு போதையில் பேருந்து நிலையத்தில் படுத்து உறங்குவதும், ரகளையில் ஈடுபடுவதும் தொடர் கதையாகி வருகிறது.
அதேபோல், பேருந்து நிலையத்தில் ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்பொழுது அங்கு வந்த 50 வயது மிக்க குடிமகன் குடிபோதையில் தள்ளாடியபடியே பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் மீது விழுந்தார்.