ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கொத்தமங்கலம் ஊராட்சியில் மொத்தம் 10 வார்டுகள் உள்ளன. அதில் நெரிச்சிப்பேட்டை, காமதேனுநகர், குமரன் நகர் வார்டுகளுக்குப் போதிய குடிநீர் வழங்கப்படுவதில்லை என அப்பகுதி பெண்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துவந்தனர்.
அதுமட்டுமல்லாமல் அந்த மூன்று வார்டுகளிலும் சாக்கடை வசதி, தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதும் செய்து தரப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டினர்.
இந்த நிலையில் அந்த வார்டுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் குடிநீர் வழங்கக்கோரி கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.