ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாரத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடிசெய்யப்பட்டது. தற்போது அறுவடை நிறைவடைந்து நெல்மூட்டைகள் விற்பனையாகிவருகின்றன. நெல் அறுவடைக்குப்பின் வயல்களில் கிடக்கும் வைக்கோல் கால்நடைகளுக்கு உலர் தீவனமாகப் பயன்படுகிறது.
சத்தியமங்கலம் வட்டாரத்தில் அறுவடைக்குப் பின்னர் வைக்கோல் சேகரிக்கப்பட்டு கட்டுகளாக மாற்றப்படுகின்றன. பெரும்பாலான இடங்களில் டிராக்டரில் இணைக்கப்பட்ட இயந்திரம் மூலம் வைக்கோல் உருளை வடிவில் கட்டுகளாக உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் 40 கிலோ கொண்ட ஒரு உருளை வைக்கோல் ரூ.140-க்கு விற்கப்பட்டது. தற்போது வைக்கோலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 140 லிருந்து 240 ரூபாயாக உயர்ந்துள்ளது.
விலை உயர்வுக்கு காரணம்?