தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரம் பேர் கரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதேபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான மதுபானக் கடைகளை மூடவும் உத்தரவிட்டது.
இந்நிலையில் அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டு 45 நாள்களுக்கும் மேலாகிய நிலையில், அண்டை மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதால், தமிழ்நாடு அரசும் நேற்று முதல் மதுபானக் கடைகளை கட்டுபாடுகளுடன் திறக்க உத்தரவிட்டுள்ளது.