தமிழ்நாட்டில் கரோனா வேகமாகப் பரவிவரும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்தும்விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம், தமிழ்நாடு கர்நாடக எல்லையில் அமைந்திருப்பதால் இரு மாநிலங்களில் பயணிக்கும் காய்கறிகள், அத்தியாவசிய பொருள்கள் கொண்டுசெல்லும் லாரிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. அரசு தடை உத்தரவை மீறிவரும் வாகனங்கள் எச்சரித்து அனுப்பப்பட்டன.