ஈரோடு மாவட்டம் கொங்கர்பாளையம் வனப்பகுதியில் நக்சல் பிரிவு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கொங்கர்பாளையம் முட்புதரில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது.
முட்புதரில் நாட்டுத்துப்பாக்கியை மறைத்து வைத்த விவசாயி கைது - unlicensed gun found at erode
ஈரோடு: கொங்கர்பாளையத்தில் நாட்டுத்துப்பாக்கிப் பதுக்கி வைத்த குற்றத்திற்காக, விவசாயி ஒருவரை நக்சல் பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
![முட்புதரில் நாட்டுத்துப்பாக்கியை மறைத்து வைத்த விவசாயி கைது gun](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10899940-thumbnail-3x2-gun.jpg)
விவசாயி
இதனைக் கைப்பற்றிய நக்சல் பிரிவு காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தினர். அதில், நாட்டுத்துப்பாக்கி தோப்பூர் அய்யணன் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:போதையில் தகராறு செய்த மகனை அடித்துக் கொன்ற தந்தை