தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடப்பாரை மூலம் ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயற்சி - Atm machine

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் எந்திரத்தை கடப்பாறையால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடப்பாரையை கொண்டு ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்களுக்கு வலைவீச்சு..!
கடப்பாரையை கொண்டு ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்களுக்கு வலைவீச்சு..!

By

Published : May 24, 2022, 7:45 AM IST

ஈரோடு: புஞ்சை புளியம்பட்டி நகர் மாதம்பாளையம் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி கிளை இயங்கி வருகிறது. வங்கியின் முன்புறம் இரண்டு ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் ஒரு பணம் செலுத்தும் இயந்திரம் என மூன்று இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நள்ளிரவு 2.30 மணியளவில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து அலாரம் ஒலி சத்தம் கேட்டுள்ளது. அலாரம் ஒலி சத்தத்தை கேட்ட அப்பகுதி பொதுமக்கள் எழுந்து சென்று பார்த்தபோது ஒரு ஏடிஎம் இயந்திரம் கடப்பாறையால் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு உடனடியாக புஞ்சை புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது ஏடிஎம் மையத்தில் இருந்த ஒரு ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

கடப்பாரையை கொண்டு ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்களுக்கு வலைவீச்சு..!

சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் ஏதும் எடுக்க இயலாததால் பல லட்ச ரூபாய் பணம் தப்பியதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சித்தது யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக ஈரோட்டில் இருந்து மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

கொள்ளையடிக்க வந்த கும்பல் ஏடிஎம் மையத்திற்குள் நுழையும்போதே அங்குள்ள சிசிடிவி கேமராவை அட்டை போன்ற காகிதத்தை வைத்து மறைத்துவிட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துள்ளனர்.

இதையும் படிங்க:கோவை அருகே ஏடிஎம் கொள்ளை முயற்சி; திகைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

For All Latest Updates

TAGGED:

Atm machine

ABOUT THE AUTHOR

...view details