தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செங்கோட்டையனால் கல்வித்துறை காவித்துறையாக மாறியுள்ளது: மு.க.ஸ்டாலின் விமர்சனம் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

ஈரோடு: செங்கோட்டையனால் கல்வித்துறை காவித்துறையாக மாறியுள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் விமர்சனம்
மு.க.ஸ்டாலின் விமர்சனம்

By

Published : Mar 28, 2021, 6:26 PM IST

Updated : Mar 28, 2021, 7:42 PM IST

ஈரோட்டில் திமுக சார்பில் கோபிசெட்டிபாளையம் தொகுதி வேட்பாளர் மணிமாறன், அந்தியூர் தொகுதி வேட்பாளர் வெங்கடாசலம், பவானி தொகுதி வேட்பாளர் துரைராஜ், பவானிசாகர் தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளர் சுந்தரம் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, "கூட்டத்தைப் பார்த்தால் கடல் அலைபோல் உள்ளது. தேர்தலுக்காக மட்டும் சந்திக்க வந்ததாக நினைக்கக்கூடாது. உங்களோடு எப்போதும் இருப்பவன் என்ற உரிமையோடு வாக்கு கேட்டு வந்துள்ளேன். மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும்.

கோபிசெட்டிபாளையத்தில் டீக்கடை நடத்திவரும் எளியவரை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளோம். செங்கோட்டையனிடம் கைகட்டி நின்றார் பழனிசாமி. தற்போது பழனிசாமியிடம் கைகட்டி நிற்கிறார், செங்கோட்டையன். பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களே மரியாதை கொடுக்காத அமைச்சர் செங்கோட்டையன்.

மு.க.ஸ்டாலின் விமர்சனம்

கல்வித்துறை காவித்துறையாக மாறியுள்ளது. உதவாக்கரை அமைச்சர் செங்கோட்டையன். ஆசிரியர்கள் பணியிடத் தற்போது பணத்தின் மூலம் நடைபெறுகிறது. கருணாநிதி மகன் நான், சொல்வதைத் தான் செய்வேன். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுகவின் தேர்தல் அறிக்கைத் தயார் செய்யப்பட்டது.

அந்தியூர் காவிரி கூட்டுக் குடிநீர் அமைக்கப்படும். அரசு கலைக்கல்லூரி கொண்டுவரப்படும். பவானியில் புறவழிச்சாலை அமைக்கப்படும். நெசவாளர்களுக்குத் தனி கூட்டுறவு வங்கி தொடங்கப்படும். ஜவுளி ஆணையம் அமைக்கப்படும். நெசவாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். அரசுப் பணியிடங்களில் தமிழர்களைக் கொண்டு நிரப்பப்படும்" என்றார்.

இதையும் படிங்க: திமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பரப்புரை

Last Updated : Mar 28, 2021, 7:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details