தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்பை ஆய்வு செய்த அமைச்சர்கள் - Erode District News

ஈரோடு: கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்பை அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கீழ்பவானி வாய்க்கலை ஆய்வுச் செய்யும் அமைச்சர்கள்

By

Published : Nov 9, 2019, 9:40 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த உக்கரம் கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட மண்அரிப்பு காரணமாக வாய்க்காலின் இடது கரையில் உடைப்பு ஏற்பட்டு நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் தேக்கம்பாளையம், நாகரணை, சின்னபீளமேடு, மில்மேடு ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், வாழை, கரும்புப் பயிர்கள் சேதமடைந்தன.

குறிப்பாக தேக்கம்பாளையத்தில் தண்ணீர் புகுந்ததால் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதித்தன. இதற்கிடையே பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் சந்தித்து நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினர்.

கீழ்பவானி வாய்க்காலை ஆய்வு செய்யும் அமைச்சர்கள்

பின்னர், உடைப்பு ஏற்பட்ட கீழ்பவானி வாய்க்கால் பகுதியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறுகையில் நாளை மாலைக்குள் கரை சீரமைக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பயனற்ற ஆழ்துளைக்கிணறுகள் மழைநீர் சேமிப்புத்தொட்டியாக மாற்றப்படுகிறது: அமைச்சர் காமராஜ்

ABOUT THE AUTHOR

...view details