ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள கெஞ்சனூர், சிக்கரசம்பாளையம், ராஜன்நகர், புதுவடவள்ளி ஆகிய இடங்களில் அரசின் சார்பில் விலையில்லா இருசக்கர வாகனம், நிவாரணப் பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன், கோட்டாட்சியர் ஜெயராமன் கலந்துகொண்டனர். முதலில் கெஞ்சனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிவாரணப் பொருள்கள் வழங்கும் விழாவில் பொதுமக்கள் தகுந்த இடைவெளியில்லாமல் ஒருவரையொருவர் உரசிக்கொண்டு பொருள்களை பெற்றுச் சென்றனர்.