தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசின் நடவடிக்கையால் கரோனா தொற்று 50 விழுக்காடு குறைவு: அமைச்சர் பெரியகருப்பன் - அரசின் நடவடிக்கையால் கரோனா தொற்று 50 விழுக்காடு குறைவு

ஈரோடு: அரசின் நடவடிக்கையால் கரோனா தொற்று 50 விழுக்காடு குறைந்துள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

அரசின் நடவடிக்கையால் கரோனா தொற்று 50 விழுக்காடு குறைவு
அரசின் நடவடிக்கையால் கரோனா தொற்று 50 விழுக்காடு குறைவு

By

Published : Jun 11, 2021, 9:38 AM IST

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சியில் காய்ச்சல் முகாமினை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், " கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அடுத்த 15 நாட்களுக்குள் கரோனா தொற்று இல்லை என்ற நிலை உண்டாகும். கரோனா தொற்றை தடுப்பதில் முதலமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார்.

எதிர்க்கட்சியினர் பாராட்டும் வகையில் திமுகவின் ஆட்சி நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 750 படுக்கைகள் காலியாக இருக்கும் அளவுக்கு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அரசின் நடவடிக்கையால் கரோனா தொற்று 50 விழுக்காடு குறைவு

குறிப்பாக கரோனா பரவல் குறைந்திருப்பதற்கு காரணம் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கையால் கரோனா தொற்று 50 விழுக்காடு குறைந்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க: இமயமலை உப்பில் இவ்வளவு நன்மைகளா!

ABOUT THE AUTHOR

...view details